'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
ஒளி ஓவியர் பாலுமகேந்திரரா மிகப்பெரிய வாசிப்பாளர். எப்போதும் புத்தகங்களுடன்தான் இருப்பார். தனது வாழ்வின் கடைசி காலம் வரை படித்துக்கொண்டே இருந்தார். ஒரு நல்ல வாசிப்பாளன்தான் நல்ல இயக்குனராக இருக்க முடியும் என்பார்.
தற்போது அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. மதராச பட்டினம், வனமகன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் 6 அத்தியாயம் படத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அஜயன்பாலா இந்த நூலகத்தை உருவாக்கி உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம், நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம் , சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது .