ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த்திரையுலகில் மார்ச் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள் ளது. தமிழ்ப்புத்தாண்டு தினத்திற்குள் ஒரு நல்ல முடிவு தெரியும் என்று எதிர்பார்த்தவர்கள் இதுவரை தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் தேதி குறித்து அறிவிக்கப்படாததால் நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் என அனைவருமே பீல் பண்ணத் தொடங்கிவிட்டார்கள்.
இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி விடுத்துள்ள ஒரு செய்தியில், சினிமாத்துறையை சீரமைக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலை நிறுத்தத்தை கடைபிடிக் கிறார்கள். என்றாலும் நீண்டகால காத்திருப்பு என்பது சோர்வடைய செய்கிறது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், சீக்கிரம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.