டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கன்னடத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ' யு டர்ன்' படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சமந்தா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆதி, 'சித்திரம் பேசுதடி' நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகை பூமிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் ஆரம்பமானது. அதில் பூமிகா கலந்து கொண்டார். தற்போது சமந்தா, பூமிகா, நரேன், ஆதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருவதாக படத்தின் இயக்குனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
ஒரு பரபரப்பான த்ரில்லர் ஆக உருவாகி வரும் இப்படம் இந்த வருடக் கடைசியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகத்தில் தற்போது எந்த வேலையும் நடைபெறவில்லை என்றாலும் இப்படம் இரு மொழிப் படம் என்பதால் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.