ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 45 நாட்களாக புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. வரும் 17ம் தேதியன்று அரசு தரப்பில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசிடம் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் என்னென்ன என்பது குறித்து நேற்று அனைத்துத் தயாரிப்பாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் அன்றைய தினம் பேச்சு வார்த்தை நடக்கும் எனத் தெரிகிறது.
இதனிடையே, கடந்த 45 நாட்களாக வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிடுவதற்கு ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது இனி வரும் காலங்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டது. அந்த முடிவுக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனராம்.
அதன்படி, இனி படங்களின் வெளியீடு என்பது அந்தப் படங்கள் எந்த தேதியில் சென்சார் ஆனதோ அதை வைத்தே முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய படங்களோ, சிறிய படங்களோ, எந்தப் படம் முதலில் சென்சார் செய்யப்படுகிறதோ, அந்த வரிசைப்படிதான் படங்களை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
பெரிய படங்களால் சிறிய படங்களின் வெளியீடு பாதிக்கப்படக் கூடாது என்பதற்குத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளதாம்.