டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள பல நாடுகளிலும் வழக்கமான இந்தியத் திரைப்படங்களை விட கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிவந்த 'பாகுபலி '2 படம் வசூலை அள்ளிக் குவித்த படமாக அமைந்தது. 2017ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளுக்காக இப்படம் பல பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், சிறந்த ஆக்ஷ்ன் இயக்கம், சிறந்த கிராபிக்ஸ், சிறந்த பொழுதுபோக்குப் படம் என மூன்றே மூன்று விருதுகள் மட்டுமே இந்தப் படத்திற்குக் கிடைத்திருப்பது தெலுங்குத் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண டெக்னிக்கல் பிரிவில் மட்டும் இரண்டு விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டது படக்குழுவினருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாம்.
கடந்த வருடப் போட்டியில் பல யதார்த்தமான திரைப்படங்களுக்கே அதிக விருதுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். கமர்ஷியலான, வசூலைக் குவித்த படங்களை அதிகம் பரிசீலிக்கவில்லை என்கிறார்கள். 'பாகுபலி 2' படம் இந்தியாவில் உருவான ஒரு சர்வதேசத் தரத்திலான படம் என்பது உறுதி. அதற்கு மேலும் சில விருதுகளைக் கொடுத்திருக்கலாம் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.
2015ல் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்திற்கு 2 தேசிய விருதுகள் மட்டுமே கிடைத்தது. சிறந்த படத்திற்கான தேசிய விருதும், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் விருதும் கிடைத்து.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 5 தேசிய விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது.