ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை திஷா பாண்டே ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுப்பதால் தனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். தமிழ்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திஷா பாண்டே. இவர் இப்போது எஸ்.டி.வேந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருப்பதால், அதில் நடிக்க திஷா பாண்டேயை அழைத்துள்ளார் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன். ஆனால் அவரோ அந்தா, இந்தா என்று நடிக்க மறுத்து வருவதால் பொறுமையிழந்த தயாரிப்பாளர், திஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
அதில், நான் மயங்கினேன் தயங்கினேன் படத்தை தயாரிக்கிறேன். இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் எல்லாம் முடிவடைந்த நிலையில், யுகபாரதி எழுதிய கனவினில்... எனத் தொடங்கும் பாடல் காட்சி மட்டும் பாக்கி இருந்தது. இதற்காக ரூ.20 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உள்ளது. சூட்டிங்கிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் நாயகி திஷா பாண்டேயை அழைத்தால் அவர் வர மறுக்கிறார். கேட்டால் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன், மலேசியாவில் இருக்கிறேன் என்று காலம் கடத்தி வருகிறார். மேலும் நான் என்னுடைய பழைய மேனேஜரை மாற்றிவிட்டேன். எது பேசுவதாக இருந்தாலும் என்னுடைய புது மேனேஜரிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டார். புது மேனேஜரை தொடர்பு கொண்டால், அவரது போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. திஷா பாண்டே சூட்டிங்கிற்கு வராததால் எனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.