மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் மிருகம், ஈரம், அரவாண் என பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதையடுத்து சில வருடங்கள் படங்கள் இல்லாமல் தெலுங்கில் நடித்து வந்த அவர், பின்னர், யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதையடுத்தும் படவாய்ப்பு கள் இல்லாததால் மீண்டும் தெலுங்கிற்கு சென்று நடித்து வருகிறார்.
அதோடு, சமந்தா நடித்து வரும் யுடர்ன் படத்தின் ரீமேக்கிலும் நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா புலனாய்வு நிருபராக நடிக்க, அதிரடி சப் இன்ஸ் பெக்டராக நடிக்கிறார் ஆதி.
யுடர்ன் கன்னட படத்தில் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்த ரோஜர் நாராயணனின் நடிப்பில் இருந்து மாறுபட்ட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம் ஆதி.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.