‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ராம்சரணுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள ரங்கஸ்தலம் படம் மெகா ஹிட்டடித்துள்ளது. இதனால் சமந்தாவின் எதிர்கால சினிமா மீண்டும் பிரைட்டாகியுள்ளது. அதோடு, முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவரை மீண்டும் நடிக்க வைப்பதற்கு கதைகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமந்தா விடுத்துள்ள ஒரு செய்தியில், திருமணத்திற்கு பிறகும் நான் சினிமாவில் பிசியாக நடிக்கிறேன் என்றால் அதற்கு என் கணவர் நாக சைதன்யா தான் காரணம். எனக்கு முழு உற்சாகம் கொடுத்து வருகிறார். அவரிடத்தில் நான் நடிக்கும் படங்கள் பற்றிய எந்த விசயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை.
சினிமாவைப்பற்றி சில அட்வைஸ்களை அவர் எனக்கு கொடுப்பார். அதாவது, சினிமாவில் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. ரசிகர்களிடம்தான் உள்ளது. ஒருவேளை நடிக்கிற படங்கள் ஓடவில்லை என்றாலும் கவலைப்படக்கூடாது. அதையே நினைத்து பீல் பண்ணாமல் அடுத்து ரசிகர்களுக்கு பிடித்தமான படத்தை கொடுத்து விட வேண்டும் என்கிற உற்சாகத்துடன் நடிக்கத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு படத்திற்கும் 100 சதவிகிதம் நடிப்பை கொடுக்க வேண்டும் என்பார்.
இதையடுத்து, முன்பெல்லாம் நடித்த படம் ஓடவில்லையென்றால் சோர்ந்து போகும் நான், இந்த விசயத்தில் இப்போது நானும் என் கணவரின் பாலிஸியை பின்பற்றத் தொடங்கி விட்டேன் என்கிறார் சமந்தா.