அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான 'சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்' என்கிற படம் பரவலாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், தமிழிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில், ஜெயிலில் இருந்து தனது கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகசம் படமாக்கப்பட்டு இருந்தது.
இந்தப்படத்தின் ரீமேக்கில் ஜீவா நடிக்க இருப்பதாகவும், இந்தப்படத்தை நடிகர் ஜீவாவுக்கு திரையிட்டு காட்டியதாகவும்.. படத்தை பார்த்த ஜீவாவும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. தற்போது இயக்குனர் டினு பாப்பச்சனும், ஜீவாவும் இந்த தகவலை ஒன்றாக இணைந்து உறுதி செய்துள்ளனர். தமிழிலும் இதே டினு பாப்பச்சன் தான் படத்தை இயக்கவுள்ளார் .