ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான 'சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்' என்கிற படம் பரவலாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், தமிழிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில், ஜெயிலில் இருந்து தனது கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகசம் படமாக்கப்பட்டு இருந்தது.
இந்தப்படத்தின் ரீமேக்கில் ஜீவா நடிக்க இருப்பதாகவும், இந்தப்படத்தை நடிகர் ஜீவாவுக்கு திரையிட்டு காட்டியதாகவும்.. படத்தை பார்த்த ஜீவாவும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. தற்போது இயக்குனர் டினு பாப்பச்சனும், ஜீவாவும் இந்த தகவலை ஒன்றாக இணைந்து உறுதி செய்துள்ளனர். தமிழிலும் இதே டினு பாப்பச்சன் தான் படத்தை இயக்கவுள்ளார் .