தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான 'சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்' என்கிற படம் பரவலாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், தமிழிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில், ஜெயிலில் இருந்து தனது கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகசம் படமாக்கப்பட்டு இருந்தது.
இந்தப்படத்தின் ரீமேக்கில் ஜீவா நடிக்க இருப்பதாகவும், இந்தப்படத்தை நடிகர் ஜீவாவுக்கு திரையிட்டு காட்டியதாகவும்.. படத்தை பார்த்த ஜீவாவும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. தற்போது இயக்குனர் டினு பாப்பச்சனும், ஜீவாவும் இந்த தகவலை ஒன்றாக இணைந்து உறுதி செய்துள்ளனர். தமிழிலும் இதே டினு பாப்பச்சன் தான் படத்தை இயக்கவுள்ளார் .