இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இடைவெளியில்லாமல் படங்களில் நடித்துவரும் மோகன்லால், தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக நீராளி, காயங்குளம் கொச்சுன்னி ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
இந்தநிலையில் தனது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 'பிலாதிகதா' என்கிற படத்திலும் சின்னதாக ஒரு ரோலில் மோகன்லால் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. காரணம் மோகன்லாலின் நண்பரும் நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூவின் மகன் நிரஞ்சன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் தான்.
ஆனால் முதலில் நட்புக்காக மோகன்லாலை ஒப்புக்கொள்ள வைத்த இயக்குனர் ரஞ்சித், போகப்போக மோகன்லால் கேரக்டரை நீண்ட நேரம் வரும்படி மாற்றியமைத்து விட்டாராம். இதை தொடர்ந்து இந்தப்படத்திற்காக மே-1௦ முதல் ஜூன்-25 வரை மொத்தம் 45 நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளாராம் மோகன்லால்.