வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாடகர் யேசுதாஸ்க்கு 8வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 விருதுகள் பெறும் முதல் பாடகர் அவர்தான். தேசிய விருது பற்றி யேசுதாஸ் கூறியதாவது:
இன்று (நேற்று) காலையில் நான் வழக்கம்போல எழுந்து பிராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். என் மகன் வந்து என்னை கட்டித் தழுவினான். நான் வழக்கம்போல பாசத்தை பொழிகிறான் என்று தான் நினைத்தேன். அதற்பிறகு சொன்னான். உங்களுக்கு தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள். இது 8வது விருது என்றும் சொன்னான்.
என் குருநாதர் சொல்வார் லட்சுமி (பணம்) பின்னாடி போகாதே அவள் எப்போ வேணாலும் உன்னை கைவிட்டு விடுவாள். சரஸ்வதி (ஞானம்) பின்னால் போ எப்போதும் கூடவே இருப்பாள் என்று. அதைத்தான் நான் இப்போதும் கடைபிடிக்கிறேன். ஸ்ருதி சுத்தமாக இருந்தால் பணமும், புகழும் தானாக வரும். அதை தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை.
சங்கீதம் பெரிய வரம். அது கிடைத்தால் வாழ்க்கையில் வேறு எதுவுமே தேவையில்லை. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் எனக்கு எதுவுமே தெரியாது இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதி தினமும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிறைய கிடைக்கும். இன்றைய இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன் நேரத்தை வீணாக்காதீர்கள். பயனுள்ள வழியில் அதனை செலவு செய்யுங்கள் உங்களுக்கு எல்லாம் வந்து சேரும். விருது கொடுப்பவர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றிகள் கோடிகள். என்றார்.