'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த தெலுங்கு பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் தெரிவித்து வருகிறார். ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் அதனை இணையதளங்களில் பதிவேற்றி வருகிறார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவரை சங்கத்திலிருந்து நீக்கி படங்களில் நடிக்கவும் தடைவிதித்தது.
இதனை எதிர்த்து ஸ்ரீரெட்டி தெலுங்கு பிலிம் சேம்பர் முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஸ்ரீரெட்டிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆதராவக கிளம்பி உள்ளனர். பல பெண்கள் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. அது குறித்து விளக்கம் அளியுங்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் தெலுங்கானா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர் 20 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதில் 10 பேர் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள். 10 பேர் பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்த அமைப்பு தனது விசாரணையை துவங்கி உள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா கூறும்போது "ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பதால் அவர் மீதான தடை நீக்கப்படுகிறது. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கலாம்" என்றார்.