ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
முதன்முறையாக ஒரேநேரத்தில் "காற்று வெளியிடை" மற்றும் "மாம்" படங்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வீடியோ வடிவில் நன்றி தெரிவித்துள்ளார் ரஹ்மான்.
காற்று வெளியிடை படத்திற்கு தேசிய விருது கிடைத்தது சந்தோஷமாக உள்ளது. மணிரத்னத்திடம் படம் பண்ணும் போது ரொம்பவே ஸ்பெஷல். அவர் ஒரு ஐடியா கடல். மறுபடியும் என் அருமை அண்ணன் மணிரத்னம், கார்த்தி உள்ளிட்ட காற்று வெளியிடை படத்தின் மொத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே.
மாம் படத்திற்காக ஸ்ரீதேவி நேரடியாக சென்னைக்கு வந்து இந்தபடம் ரொம்ப ஸ்பெஷல், நாட்டுக்கு தேவையான படம் என்றார். இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஸ்ரீதேவியை தான் மிஸ் செய்கிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.