இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரையில் சிரீயலில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், வைபவ் நடித்த மேயாதமான் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, உதயநிதிஸ்டாலின் ஆகியோருடனும் தலா ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இதுகுறித்து பிரியா கூறுகையில், எனது இந்த வளர்ச்சிக்கு காரணமே ரசிகர்கள் தான். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தபோது எனக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
சினிமா வாய்ப்பு வந்தபோது, விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் பெரிய நடிகராகி விட்டதால், நம்மாளும் முடியும் என்கிற ஒரு தைரியம் வந்தது. இப்போதைய ரசிகர்கள் சினிமா, சின்னத்திரை என்று பிரித்துப்பார்ப்பதில்லை. யார் நன்றாக நடித்தாலும் அவர்களை ரசிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த வகையில், நான் சினிமாவில் வேகமாக வளர்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் தான் காரணம் என்கிறார் பிரியா பவானி சங்கர்.