பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடித்தள்ள மௌனப் படமான 'மெர்க்குரி' படம் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வெளியிடாமல் மற்ற மாநிலங்களில் முதலில் வெளியிட்டுவிட்டதால், இப்படத்திற்கு வரும் விமர்சனம் தமிழ்நாட்டில் வெளியாகும் போது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அது பற்றி தெரிந்தும் கூட கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட்டுள்ளார் என திரையுலகில் வருத்தப்படுகிறார்கள். இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் படம் எப்படி வியாபாரம் ஆகும், வசூலிக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மற்ற மாநிலங்களில் வெளியாகியுள்ள இப்படம் பற்றிய விமர்சனம் வெளிவந்துவிட்டது. ஹாலிவுட்டில் 2016ல் வெளிவந்த 'Don't Breathe' என்ற படத்தின் காப்பிதான் 'மெர்க்குரி' என்கிறார்கள்.
ஐந்து நண்பர்கள் சாலையில் பயணிக்கும் போது எதிர்பாராமல் பிரபுதேவாவை கொன்று விடுகிறார்கள். அவரது உடலை ஒரு காட்டில் வைத்து எரித்தும் விடுகிறார்கள். ஆனால், பிரபுதேவா உயிருடன் வந்து அவர்களை மிரட்டுகிறார். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கதையாம்.
படம் மிகவும் சீரியசாக நகர்கிறது என்கிறார்கள் மற்ற மாநில விமர்சகர்கள்.