ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
65வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இவற்றில் தமிழ்ப் படக் கலைஞர்களுக்காக இரண்டே இரண்டு விருதுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான், ' காற்று வெளியிடை' படத்தின் பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், அதே படத்தில் இடம் பெற்ற 'வான் வருவான்...' பாடலைப் பாடிய சாஷா திரிபாதி சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதையும் பெற்றார்கள்.
சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக செழியன் இயக்கிய 'டூ லெட்' படம் தேர்வு பெற்றது. தமிழ்ப் படங்கள் சார்பாக மொத்தமாக மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது.
தேசிய விருதுகளுக்காக தமிழிலிருந்து மொத்தம் 32 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 'அச்சமில்லை அச்சமில்லை, அறம், காற்று வெளியிடை, குரங்கு பொம்மை, கரு, மெர்சல், நாச்சியார், ஒரு கிடாயின் கருணை மனு, பா பாண்டி, ஒரு பக்கக் கதை, தரமணி, தொண்டன், வனமகன், வேலைக்காரன், வேலையில்லா பட்டதாரி 2, விக்ரம் வேதா” ஆகியவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்கள். பல்வேறு விருதுப் பிரிவுகளுக்காக இந்தப் படங்கள் விண்ணப்பித்திருந்தன. கடைசியில் 2 தனிநபர் விருதுகளும், ஒரு படத்திற்கான விருதும் மட்டுமே கிடைத்துள்ளது.
அதே சமயம் மலையாளத்திலிருந்து மொத்தம் 66 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் பல சிறந்த படங்கள் இடம் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். அதனால் தான், இந்த வருட விருதுகள் பட்டியலில் மலையாளப் படங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன.