பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. சமீபகாலமாக தனது சமூக வலைப் பக்கங்களில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த சினிமா பிரபலங்களை அம்பலப்படுத்தி வருகிறார்.
இது தொடர்பான படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தெலுங்கு திரையுலகம் ஸ்ரீரெட்டிக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்தது. இதனால் தனக்கு நியாயம் கேட்டு தெலுங்கு பிலிம் சேம்பர் முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். தெலுங்கு நடிகர் சங்கம் அவரை உறுப்பினராக்க முடியாது என்று அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆதரவு பெருகி வருகிறது. பல பெண்கள் அமைப்பினர் ஸ்ரீ ரெட்டிக்கு உதவ முன்வந்துள்ளன. சில நடிகர், நடிகைகள், உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் வெளிப்படையாக ஸ்ரீரெட்டிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய மனித உரிமை ஆணயத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீரெட்டி பற்றி விளக்கம் கேட்டு தெலுங்கானா அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
"ஸ்ரீ ரெட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் தனி மனித உரிமையை பறிப்பதாகும். ஸ்ரீரெட்டியின் நிலை என்ன? அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளியுங்கள்" என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஸ்ரீரெட்டியிடம் நேரடி விசாரணை நடத்த மனித உரிமை ஆணை உறுப்பினர்கள் குழு ஐதராபாத் வந்துள்ளனர்.