ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தியேட்டர்களில் வசூலிக்கப்படும் கியூப் கட்டணம், பார்க்கிங், கேண்டீன் கட்டணம், ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் ஆகியவற்றைக் கண்டித்து திரையுலகம் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 45 நாட்களாக நடந்து வரும் இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தயாரிப்பாளர் சங்கம் தியேட்டர் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேச ஏற்பாடு செய்தது. சென்னை ஆந்திரா கிளப்பில் இந்த சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சங்க கட்டுப்பாட்டை மீறி தயாரிப்பாளர்களை சந்திக்கும் தியேட்டர் அதிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் நேற்றைய சந்திப்புக்கு எதிர்பார்த்த தியேட்டர் அதிபர்கள் வரவில்லையாம். இதனால் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை வருகிற 17ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சந்திப்பு வருகிற 17ந் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.