பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்நாட்டில் ராமானுஜர் போன்று கேரளாவில் வாழ்ந்த மகான் ஸ்ரீ நாராயண குரு. இவரது வாழ்க்கை இதற்கு முன்பே திரைப்படமாக வந்துள்ளது. ஸ்ரீ நாராயண குருவாக, தலைவாசல் விஜய் நடித்து விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் கின்னஸ் சாதனைக்காக நாராயணகுருவின் வாழ்க்கையை 51 மணி நேரத்தில் படமாக தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் விஷ்வகுரு என்ற பெயரில் உருவாகி உள்ள இந்தப் படத்தை விஜேஷ் மணி இயக்கி உள்ளார். புருஷோத்தமன், கைனக்கரி, காந்தியன் சாச்சா, சிவராஜன், சுவாமி சச்சிதானந்தா, உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கில்மனூர் ராமவர்மா இசை அமைத்திருக்கிறார், லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் விஜேஷ் மணி கூறியதாவது: இலங்கையில் தயாரான மங்களகமனா என்ற படம்தான் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட படமாக கின்னஸ் சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 71 மணி நேரத்தில் தயாராகி இருந்தது. நாங்கள் 51 மணி நேரத்தில் முடித்து சாதனை படைத்தோம். பல நாள் திட்டமிடல், கடுமையான ஒத்திகை, நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பு இவற்றால் இந்த முயற்சி சாத்தியமானது என்றார்.