டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்த்திரையுலகினர் மவுன ஆர்ப்பாட்டம் செய்தனர். அதே தேதியில், சிம்பு மீடியாக்களை அழைத்து ஒரு ஆவேச பேட்டி கொடுத்தார்.
அதில், காவிரி விசயத்தை இங்கே எல்லோரும் அரசியலாக்குகிறார்கள். அதனால் இரண்டு மாநில மக்களும் பேசினால் மட்டுமே இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். நம்முடைய நிலையை அவர்களிடம் சொன்னால் கர்நாடக மக்களும், தாய்மார்களும் கண்டிப்பாக நம்மை புரிந்து கொண்டு தண்ணீர் கொடுக்க சம்மதம் சொல்வார்கள் என்று சொன்னார்.
மேலும் 11ம் தேதி ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து, அதை போட்டோவோ, வீடியோவோ எடுத்து அனுப்புங்கள் என்று கூறியிருந்தார். அவர் சொன்ன UniteForHumanity என்ற ஹேஷ்டாக்கும் வைரலானது
சிம்பு பேசிய அந்த வீடியோ தற்போது கர்நாடகாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அவரது கருத்தை ஏற்று ஏராளமான கன்னடர்கள் தமிழா்களுக்கு தண்ணீா் கொடுப்பது போன்ற வீடியோ, போட்டோவை எடுத்து பதிவிட்டுள்ளனர்.
தீய சக்திகள்
நிறைய பேர் போட்டோவும், வீடியோவும் எடுத்து அனுப்பியதை தொடர்ந்து சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், இதன்மூலம், கன்னட மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. இடையில் உள்ள தீய சக்திகள் தான் நம்மை இணைய விடாமல் சதி செய்து வருகின்றன என்று உணர்த்தியுள்ளீா்கள். அவா்கள் முகங்களில் நீங்கள் கரியை பூசி உள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிம்புவின் இந்த விஷயத்தை கன்னட நடிகர் ஆனந்த் நாக் வரவேற்றுள்ளார். அதோடு, அவர் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அவசியம். நான் தமிழர்களுக்கு எதிரானவன் இல்லை. தமிழர்கள் நல்லவர்கள் தான். இந்த காவிரி விசயத்தைப் பொறுத்தவரை சிம்பு சொன்னது போன்று இரண்டு மாநில மக்களும் தான் பேசி தீர்க்க வேண்டும். அவர் சொன்னது தான் சரியான வழி. காவிரி விவகாரத்தில் அனைவருமே அரசியல் செய்கிறார்கள். இந்த விசயத்தில் ரஜினி, கமல் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்
சிம்புவின் பேச்சுக்கு கர்நாடகத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது.