பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணந்தால் ஆஞ்சநேயன் என்று பி.எஸ்.வீரப்பா ரேஞ்சுக்கு பேசி வந்த நடிகை அனன்யா, இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று திருமணத்தை தள்ளி வைத்துள்ளாராம். நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்தவர் நடிகை அனன்யா. மலையாளத்தை சேர்ந்த இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம் முடிவாகி நிச்சயமும் நடந்தது.
இந்நிலையில் மணமகன் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், அதை மறைத்து தனது மகளை திருமணம் செய்ய முயற்சித்ததாகவும் அனன்யாவின் அப்பா போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து ஆஞ்சநேயனை போலீசார் விசாரித்தனர். அதில் தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது உண்மை தான் என்றும், முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையீடு செய்துள்ளதாவும், இந்த விஷயம் எல்லாம் அனன்யாவுக்கு தெரியும் என்று ஆஞ்நேயன் கூறினார். அனன்யாவும் இதை மறுக்காமல் ஒப்புக்கொண்டார். மேலும் கல்யாணம் செய்தால் ஆஞ்சநேயனைத் தான் கல்யாணம் செய்வேன் என்று உறுதியோடு இருந்தார்.
இதனிடையே நடிகை அனன்யா தனது முடிவை திடீரென மாற்றிக்கொண்டு, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அதனால் திருமணத்தை பற்றி இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை என்று அனன்யா கூறியுள்ளார்.
அனன்யாவின் இந்த திடீர் முடிவால், ஆஞ்சநேயன் உடனான திருமணம் தற்காலிகமாக ரத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.