தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் காவிரி போராட்டங்கள் பற்றி பலரும் தொடர்ந்து கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப் பிரபலங்கள், தனி நபர்கள் என பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அனைவரது கருத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதைப் பற்றியே இருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டம் குறித்து ஐபிஎல் ரசிகர்கள் பலர் போட்டியை பார்த்தே தீருவோம் என்றார்கள். அவர்களுக்கு கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பலர் தெரிவித்தார்கள். இதனிடையே, நடிகர் அரவிந்த் சாமி கடந்த இரண்டு நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி அவருடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், “2 நாட்களில் 2 எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்தன. ஒன்றிற்கு எதிர்மறையான விளம்பரம் கிடைத்தது. நமது சொந்த மக்களையும் பாதித்தது. ஒரு உணர்ச்சிகரமான சூழலையும் உருவாக்கியது. மற்றொன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ஒரு நோக்கத்திற்காகவும், தேவைக்காகவும் அது இருந்தது. எதிர்காலத்தில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டியதை ஆதரித்து இந்த பதிவை போட்டுள்ளாரா ?.