'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் காவிரி போராட்டங்கள் பற்றி பலரும் தொடர்ந்து கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப் பிரபலங்கள், தனி நபர்கள் என பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அனைவரது கருத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதைப் பற்றியே இருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டம் குறித்து ஐபிஎல் ரசிகர்கள் பலர் போட்டியை பார்த்தே தீருவோம் என்றார்கள். அவர்களுக்கு கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பலர் தெரிவித்தார்கள். இதனிடையே, நடிகர் அரவிந்த் சாமி கடந்த இரண்டு நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி அவருடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், “2 நாட்களில் 2 எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்தன. ஒன்றிற்கு எதிர்மறையான விளம்பரம் கிடைத்தது. நமது சொந்த மக்களையும் பாதித்தது. ஒரு உணர்ச்சிகரமான சூழலையும் உருவாக்கியது. மற்றொன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ஒரு நோக்கத்திற்காகவும், தேவைக்காகவும் அது இருந்தது. எதிர்காலத்தில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டியதை ஆதரித்து இந்த பதிவை போட்டுள்ளாரா ?.