'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சிகரமான அரசியல் கதைகளில் பல படங்களை இயக்கியவர். அதோடு, விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி எதிர்காலத்தில் அவரை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதும் அவரது ஆசையாக இருந்து வந்தது.
விஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக விஜய்யின் அரசியல் எண்ணங்கள் முடங்கி போய் உள்ளது. இதனால் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இது குறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டால், இன்றைய சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது சரியென்று படவில்லை. அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்பதை விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்வதற்கில்லை என கூறியுள்ளார்.