ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மெர்குரி படத்தை அடுத்து 'யங் மங் சங்', 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, அடுத்து சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருந்தார்.
மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தப் பிரச்சனை காரணமாக உடனடியாகப் தபாங் 3 படம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
எனவே நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் பிரபுதேவா. பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் பார்த்திபன். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் பார்த்திபன்.