ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காவிரி வாரியம் தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல், பிரதமர் மோடிக்கு என குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி உள்ளதாவது...
"ஐயா வணக்கம். நான் கமலஹாசன். நான் உங்கள் குடிமகன். இது எனது மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பி தரும் ஒரு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை நீங்கள் அறியாதது அல்ல. தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீதி கிடைத்தாகி விட்டது. ஆனால் அதை செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும் பண்டிதர்களும் இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காக தான் என நம்பத் துவங்கி விட்டனர். அது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என நம்புகிறேன்.
அது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது எனது உரிமை. இங்கே இந்த வீடியோ வடிவில் சொல்ல மறந்தைகளையும் கடித வடிவில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து செயல்படுங்கள். இந்நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம் வாழ்க இந்தியா. நீங்களும்".
இவ்வாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.