ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தியேட்டர்களில் கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும், பார்க்கிங், கேண்டீன், ஆன்லைன் புக்கிங் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. தியேட்டர் அதிபர்கள், டிஜிட்டல் சேவை நிறுவனத்தினருடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.
இந்தநிலையில் தயாரிப்பாளர் சங்கம் இன்று தியேட்டர் அதிபர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரைஅரங்க உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக நாளை (இன்று) வியாழன் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. நடக்கவிருக்கும் இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் உள்ள திரைஅரங்க உரிமையாளர்களான சகோதர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.