‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
காவிரி பிரச்னை தொடர்பான போராட்டங்கள் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நடந்துவரும் நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நடிகர் பிரகாஷ்ராஜ், காவிரி பிரச்னை தீர எந்த அரசியல் கட்சியும் விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
நைல் நதி நீரை 4 நாடுகள் சுமுகமாக பங்கிட்டு கொள்கின்றன. நாடுகளுக்கு இடையேயான நதி நீர் பிரச்னைகள் தீரும்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னையை தீர்க்க முடியாதா? ஒரே ஒரு பேச்சு வார்த்தையில் தீர்க்க முடியும். அரசியல் தைரியம் இருந்தால் தீர்க்கலாம். ஆனால் அதற்கு யாரும் தயாராக இல்லை. இதற்கான நடவடிக்கைகளை எந்த அரசோ, கட்சியோ, தலைவர்களோ எடுக்கவில்லை. காரணம் காவிரி பிரச்னை தீராமல் அதனை உயிரோடு வைத்திருக்கவே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்றார்.