'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காவிரி பிரச்னை தொடர்பான போராட்டங்கள் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நடந்துவரும் நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நடிகர் பிரகாஷ்ராஜ், காவிரி பிரச்னை தீர எந்த அரசியல் கட்சியும் விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
நைல் நதி நீரை 4 நாடுகள் சுமுகமாக பங்கிட்டு கொள்கின்றன. நாடுகளுக்கு இடையேயான நதி நீர் பிரச்னைகள் தீரும்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னையை தீர்க்க முடியாதா? ஒரே ஒரு பேச்சு வார்த்தையில் தீர்க்க முடியும். அரசியல் தைரியம் இருந்தால் தீர்க்கலாம். ஆனால் அதற்கு யாரும் தயாராக இல்லை. இதற்கான நடவடிக்கைகளை எந்த அரசோ, கட்சியோ, தலைவர்களோ எடுக்கவில்லை. காரணம் காவிரி பிரச்னை தீராமல் அதனை உயிரோடு வைத்திருக்கவே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்றார்.