'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரையுலகம் என்பதும் போட்டிகள் நிறைந்த உலகம். ஒரே நாளில் பல படங்கள் வந்தால் அவற்றில் எந்தப் படங்கள் சிறந்த படமாக அமைகிறதோ அந்தப் படம்தான் வெற்றி பெறும். அதிலும், ஒரே சமயத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் கடும் போட்டி நிலவும்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ரஜினிகாந்த் படம் வந்தாலே தமிழைத் தவிர மற்ற மொழிகளிலும் அவர்களது படங்களைத் தள்ளி வைப்பார்கள். ரஜினி படம் தோல்வி என்று தகவல் வந்தால் தான் அடுத்த வாரங்களில் படங்களை வெளியிடுவார்கள்.
ரஜினி நடித்துள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த்து. தற்போது நடந்து வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் படம் ஜுன் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளவர் மகேஷ் பாபு மட்டுமே. அவர் நடித்துள்ள 'பரத் அனி நேனு' ஏப்ரல் 20ம் தேதி வெளியாக உள்ளது. முந்தைய 'ஸ்பைடர்' படம் தோல்வியுள்ளதால் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மகேஷ் பாபு.
இப்போது 'காலா' தள்ளிப் போவதால் போட்டிக்கு வேறு எந்தப் படங்களும் இல்லாததால் மகேஷ்பாபு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். அரசியல் படம் என்பதால் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.