பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
தியேட்டர்களில் படத்தை திரையிடுவதற்கு தயாரிப்பாளர்களிடமே பணம் வசூல் செய்து வந்த கியூப் நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. கட்டணத்தை குறைக்க கியூப் நிறுவனங்களுடன் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த நிறுவனங்கள் இறங்கி வரவில்லை.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிரச்சினையை தமிழக அரசும் கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் படத்தை குறைந்த கட்டணத்தில் தியேட்டரில் திரையிட பல புதிய டிஜிட்டல் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இதுவரை 2 நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நேற்று 3வது நிறுவனமாக கே சேரா சோ என்ற நிறுவனம் தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்திருக்கிறது. இந்த நிறுவனம் வட இந்தியாவில் 1500 தியேட்டர்களில் படத்தை திரையிட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் தியேட்டர்களில் இ சினிமா டிஜிட்டல் சேவை மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மாஸ்டரிங் யூனிட்டாகவும் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் புதிய படங்களை தயாரிப்பாளர் சங்கமே மாஸ்டரிங் செய்து தியேட்டர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.