ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கியூப் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1ந் தேதி முதல் புதிய படங்கள் எதையும் வெளியிடாமல், படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் திரையுலகினர் ஈடுபட்டு வருகிறார்கள். டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களின் நிலையை உணர்ந்து தமிழக அரசு திரையுலகினருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருக்கிறது. அதன்படி டிஜிட்டல் நிறுவன அதிகாரிகள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதல் கட்டடமாக அதிகாரிகள் மட்டத்திலும், பின்னர் அமைச்சர்கள் மட்டத்திலும் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. இன்று அல்லது நாளை இந்த பேச்சுவார்த்தை தொடங்கும். இதற்கான அதிகாரபூர்வ அழைப்பு இன்று அரசு தரப்பிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.