‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஏப்ரல் மாதம் முழுவதும் புதிய படங்கள் சூட்டிங்கிற்கு தடை விதிக்கும் தீர்மானத்தை தள்ளிவைத்து இருப்பதாகவும், புதிய படங்களுக்கு எந்த தடையும் இல்லை என்றும தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19ம்தேதி அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தின் முடிவுப்படியும், அதன் தொடர்ச்சியாக 21ம்தேதி நடைபெற்ற செயற்குழு கூட்ட முடிவுப்படியும் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி வருகிற ஏப்ரல் 30ம்தேதி வரை புதிய தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கக் கூடாது. தற்போது படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 30ம்தேதி வரை, தற்போது நடைபெற்று வரும் முறையில் தொடர்ந்து நடைபெறலாம்.
ஆனால் மே மாதம் 2ம்தேதியில் இருந்து தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் புதிதாக அமைக்கவுள்ள தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்த தொழிலாளர்களோடு மட்டுமே நடைபெற வேண்டும். மேற்கண்ட முடிவுகளை எல்லா தயாரிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்க விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்து, அதை பத்திரிகைகளுக்கு அறிவிப்பதாக இருந்தோம். மூத்த தயாரிப்பாளர் - இயக்குனர் கே.பாலசந்தர் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த பிரச்சினைகளை தற்காலிகமாக தள்ளிவைத்து, அவருடன் கலந்து ஆலோசித்த பின், அறிவிப்போம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.