இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகம் சார்பில் நேற்று காலை மௌன அறவழி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதில் அஜித், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் அதற்கான விளக்கத்தைக் கொடுக்க ஆசைப்பட்ட சிம்பு நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது விதவிதமான புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்தார். கேள்வி கேட்பது பத்திரிகையாளர்களாக இருந்தாலும், அவரால் அழைக்கப்பட்டிருந்த ரசிகர்களைப் பார்த்தே பதில் சொன்னார். ஒரு சில இடங்களில் சொல்லி வைத்தது போல அவர் பேச, அவரது ரசிகர்களும் அதற்குக் கை தட்டினர்.
ஒரு சந்தர்ப்பத்தில் காவிரியில் கர்நாடகா மக்களுக்கே தண்ணீர் இல்லாத போது அவர்கள் எப்படி தருவார்கள். வீணாகப் போகும் நீரை அவர்கள் நமக்குத் தரலாமே என்று பேச ஆரம்பித்தார். அப்துல் கலாம் ஆவி சொன்னது, கர்நாடகத் தாய்மார்களிடம் மீதமான தண்ணியைக் கேட்போம் என ஏதேதோ பேசினார். பொறுமையாக இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு கட்டத்தில் அவை பற்றி சிம்புவை கேள்விகளால் துளைத்தார்கள் . அவற்றிற்கு பதில் சொல்ல முடியாத சிம்பு, சட்டென அவரது சந்திப்பை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
காவிரி விவகாரத்தில் சிம்பு உளறிக் கொட்டிய விஷயங்கள்தான் நேற்றிலிருந்து மீம்ஸ்களாகப் பறந்து கொண்டிருக்கின்றன.