அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஆந்திரா, தெலுங்கானாவில் இப்போது பரபரப்பான நடிகை ஸ்ரீரெட்டி. தனது பேஸ்புக்கில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க ஆபாச படங்களை ரெட்டிலீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார். பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பரபரப்பு குற்றம் சாட்டினார். சில இயக்குனர்கள், நடிகர்களின் பெயரையும் சொன்னார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென தெலுங்கு பிலிம் சேம்பர் முன் ஆடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தன்னை தெலுங்கு நடிகர் சங்கத்தில் சேர்க்க மறுக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த அரை நிர்வாண போராட்டத்திற்காக ஸ்ரீரெட்டியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை நடிகர் சங்க உறுப்பிராக்க முடியாது என்று நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: பொது இடத்தில் ஆடைகளை கழைந்து அரை நிர்வாணமாக நிற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. இந்த தவறான செய்கைகள் மூலம் இலவச விளம்பரம் தேட முயற்சிக்கிறார். அவரை சங்கத்தின் உறுப்பினராக்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். என்றார்.