'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரையரங்குகளில் படங்களை திரையிட பயன்படுத்தும் கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று திரையுலகினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். படப்பிடிப்புகள், புதிய பட வெளியீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள், தியேட்டர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மீண்டும் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தியேட்டர்களில் குறைந்த கட்டணத்தில்... அதாவது தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் குறைவான கட்டணத்துடன் நாங்கள் படத்தை திரையிடுகிறோம் என்று ஏரோக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஏரோஸ் நிறுவன அதிகாரிகளும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் நேற்று கையெழுத்திட்டனர். இந்த நிறுவனத்தை தொடர்ந்து மேலும் சில புதிய நிறுவனங்களுடன் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. இதனால் பழைய நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு புதிய நிறுவனங்களுடன் பயணிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் வேலை நிறுத்தத்தை விலக்கி கொள்வதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.