ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழகத்தில், காவிரி உரிமைக்காக போராட்டம் நடந்து வரும் சமயத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது என தமிழ் சினிமா இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு, தமிழனாக ஒன்று கூடுங்கள். ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதல்வர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. காவிரிக்காக கட்சி அடையாளங்களையும், கொள்கைகளையும் தூக்கி எறிந்து விட்டு போராட வாருங்கள்.
நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது, அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், அது இளைஞர்களை திசைத்திருப்பிவிடும்.
தேசிய கட்சிகள் ஆட்சியமைக்க முடியாததால், தமிழகத்தை குப்பைக் கிடங்காக மாற்றிவிட்டன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் போட்டியை ஒரு மணி நேரம் நிறுத்தினால் தமிழர்களின் ஒற்றுமை உலகம் முழுக்க தெரிய வரும். சூதாட்டம் ஆடிய சென்னை அணிக்கு உங்கள் ஆதரவு இருக்குமென்றால், விவசாயிகளுக்கு இருக்காதா?
நம்மிடையே ஒற்றுமை இல்லாததால் காவிரி போராட்டம் வெற்றியடையாமல் உள்ளது. நம் பக்கம் நியாயம் இருந்தும், கர்நாடகா அரசியல் கட்சியினரிடையே உள்ள ஒற்றுமை நம்மிடையே இல்லாமல் உள்ளது என்றார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒரு அரசு மதிக்கவில்லை என்றால் அதற்கு என்ன சட்டம் இருக்கிறது. மாநிலம் முழுக்க சுற்றி வரும் ஆளுநர் இங்கு இருக்கும் பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை என்றனர்.