பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்திற்கு சூனியம் பிடித்தது போல் உள்ளது, என, நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
சென்னையில் நடிகர் சிம்பு கூறியதாவது:
இன்று, காலையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த மவுன போராட்டத்தில், நான் கலந்து கொள்ளவில்லை. நிறைய பிரச்னை சென்று கொண்டுள்ளது. தமிழ் சினிமா ஸ்டிரைக்கில் உள்ளது. யாருக்கும் வேலையில்லை. ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதற்கு குறை சொல்லவில்லை. நடிகனாக இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். ஜி.எஸ்.டி.,யிலிருந்து ஸ்டிரைக் வரை பல பிரச்னைகள் உள்ளன. இதற்கு அரசிடமிருந்து தீர்வு காண முடியாமல் திண்டாடி கொண்டுள்ளோம். இதில் ஸ்டெர்லைட் , காவிரி போராட்டம் நடத்தவதில் உடன்பாடில்லை. பேசாததால் தான் இவ்வளவு பிரச்னை. பேசினால் தான் பிரச்னை தீரும். பேசாமல் நடத்தும் போராட்டத்தால் என்ன பயன். இந்தபோராட்டத்தில் உடன்பாடில்லை. இதுதவறு என்றால், மன்னித்துவிடுங்கள். அரசியல் ரீதியாகவும், மக்கள் ரீதியாகவும் பிரச்னை மேல் பிரச்னை வருகிறது. இது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். முன்னாள் முதல்வர் இறந்ததிலிருந்து தமிழகத்திற்கு சூனியம் வைத்தது போல் பிரச்னைகள் வருகின்றன. முன்னாள் முதல்வர் மரணத்தில் என்று உண்மை வெளியே வருகிறதோ அன்றுதான் தமிழகத்திற்கு விடிவு வரும். பிரிமியர் லீக் கிரிக்கெட்டிற்கு யார் சொன்னாலும் சரி, கறுப்புச ட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவியுங்கள். கிரிக்கெட்டை பார்க்க கறுப்பு சட்டை அணிந்து வருபவர்களை அனுமதியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.