ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இந்த வார சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
அப்போது சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மேடைக்கு வந்தபோது, செந்தில்-ராஜலட்சுமி ஜோடி பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடி முடித்ததும், ராஜலட்சுமியைப்பார்த்து வீர தமிழச்சி என்று அவருக்கு ஒரு பட்டத்தை கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதைக்கேட்டு அவர் நெகிழ்ந்து போனார்.
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஒரு பாடலை பாடகர் செந்தில் பாட, உருகிப்போன சிவகார்த்திகேயன், அவரை மனதார பாராட்டினார்.