டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் முன்னணி ஹீரோ, முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் தமன்னாவின் ஆசையாக இருந்து வந்தது. ஆனால், பாகுபலி உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிறகு சிறந்த டெக்னீசியன்கள் இடம்பெறும் படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்து வந்தார் தமன்னா.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் கல்யாண் ராம் நடிக்கும் நா நுவ்வே என்ற படத்தில் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார் தமன்னா. இந்த படத்தில் நடிக்க முதலில் கால்சீட் கேட்டபோது சம்பள பிரச்சினை காரணமாக தட்டிக் கழித்து வந்த தமன்னா, அப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை அறிந்ததும் உடனே ஒப்பந்தமாகி விட்டார்.
அதோடு நேற்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தமன்னா, பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசைகளில் ஒன்றாக இருந்து வந்தது. அது இன்றைக்கு நிறைவேறியுள்ளது. அவரது ஒளிப்பதிவில் நடித்தது பெருமையாகவும், கெளரவமாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.