இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதற்கு முன் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். தமிழக மக்களின் கோரிக்கை நியாயமானது; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும். சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி தண்ணீர் தான். அவர்களுக்காக தான் இந்த போராட்டம்.
தமிழக மக்களின் ஒரே குரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான். காவிரி , ஸ்டெர்லைட் போராட்டம் இரண்டும் ஒன்றுதான். பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை; மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது. தமிழகம் காவிரிக்காக போராடும் தருணத்தில், ஐபிஎல் விளையாட்டு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். காவிரி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும். ஐபிஎல் போட்டியை காண செல்லும் ரசிகர்களும், கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்.
ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த விளக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காவிரி விவகாரத்தில் அனைத்தும் அரசியல் தான். கல்வி விவகாரத்தில் அரசியலை புகுத்தக்கூடாது; இந்த தருணத்தில் கர்நாடகாவை சேர்ந்தவரை அண்ணா பல்கலை. துணைவேந்தராக நியமித்திருப்பது தவறு. கர்நாடகாவில் எனது படத்தை வெளியிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர்கள், மாநில அரசு பார்த்துக் கொள்ளும்.
என்னுடைய எதிரி கமல் இல்லை; அவரை நான் எதிர்க்க மாட்டேன். ஏழ்மை, லஞ்சம், வேலையின்மைதான் எனது எதிரி. பேசிப் பேசியே நிறைய அரசியல் செய்து விட்டோம். நிறைய பேசினால் எதிரிகள் தான் வருவார்கள். இவ்வாறு ரஜினி பேசினார்.