சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் திரைதுறையினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
அப்போது பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் என்பது உரிமை. பேராசையல்ல. தண்ணீருக்காக தான் 3வது உலகப் போர் வரும் என்கிறார்கள். அதனால் நதி இறைவனுக்கு சமம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது. வேலைவாய்ப்பை தரும் என்றாலும் மக்களை பாதிக்கும் பிரச்னை என்றால் அதற்கு அரசுகள் தீர்வு காணவேண்டும்.
திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக இன்று மௌன அறவழி போராட்டம் நடத்த உள்ளோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக போராடும் ஒவ்வொருவரையும் திரையுலகம் தலை வணங்குகிறது. இவ்வாறு நாசர் பேசினார்.
தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, போராட்டத்தை துவக்கினர்.