தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையுலகினர் போராட்டம் துவக்கி உள்ளனர். காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இந்த போராட்டத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி அமைப்பினர் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சிவகார்த்திகேயன், சிவக்குமார், சூர்யா, செந்தில், பசுபதி, வையாபுரி, பிரசாந்த், பார்த்திபன், மன்சூர் அலிகான், தனுஷ், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமைய்யா, சக்தி, விக்ரம், விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, விஜய் ஆன்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகைகள் ஆர்த்தி, குட்டி பத்மினி,ரேகா, தன்ஷிகா, பசி சத்யா, அம்பிகா, சத்யபிரியா, சி.ஆர்.சரஸ்வதி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.