‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையுலகினர் போராட்டம் துவக்கி உள்ளனர். காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இந்த போராட்டத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி அமைப்பினர் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சிவகார்த்திகேயன், சிவக்குமார், சூர்யா, செந்தில், பசுபதி, வையாபுரி, பிரசாந்த், பார்த்திபன், மன்சூர் அலிகான், தனுஷ், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமைய்யா, சக்தி, விக்ரம், விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, விஜய் ஆன்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகைகள் ஆர்த்தி, குட்டி பத்மினி,ரேகா, தன்ஷிகா, பசி சத்யா, அம்பிகா, சத்யபிரியா, சி.ஆர்.சரஸ்வதி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.