மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில் 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், நேற்று முன்தினம், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
இரண்டு நாட்கள் சிறை வாசம் அனுபவதித்த சல்மான் கானுக்கு, ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ரூ.50 ஆயிரம் பிணைய பத்திரத்துடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பிறப்பி்த்த உத்தரவில் 87 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சல்மான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷியும் ஒருவர்.