‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமா தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. கியூப் கட்டண உயர்வை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்கப்போவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இந்த பேரணிக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு மக்கள் காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும்போது திரைப்படத்துறையினர் தங்கள் பிரச்சினைக்கு பேரணி நடத்துவதா? என்ற கேள்வி எழுந்தது.
இதனால் பேரணி கைவிடப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று திட்டமிட்டனர்.
இதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரைதான் போலீஸ் அனுமதி கிடைத்தது. எனவே இந்த நேரத்துக்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடியாது என்பதால் 4 மணிநேர அறவழி போராட்டம் என்று அறிவித்துள்ளனர்.
அதாவது இந்த போராட்டத்தின் போது யாரும் பேச மாட்டார்கள். வந்து அமைதியாக அமர்ந்து விட்டுச் செல்வார்கள். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி ஆகியவை இணைந்து நடத்துவதால் திரையுலகம் திரண்டு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நடிகர்களில் கமல் மட்டுமே கலந்து கொள்வதாக அறிவித்திருக்கிறார். மற்றவர்கள் வருகை இருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.
இந்த போராட்டத்தில் அனைத்து திரையுலகினரும் பங்கேற்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகள் கேட்டு கொண்டுள்ளனர்.