போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் மறக்க முடியாத நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ். எத்தனையோ படங்களில் நாயகிகளுக்கு அப்பாவாகவே நடித்திருப்பார். அவருடைய யதார்த்தமான நடிப்பும், அந்த சிரிப்பும், தெளிவான குரலும் பல படங்களில் அவரை ரசிக்க வைத்துள்ளன. அவருக்கென்றே உருவாக்கப்பட்ட பல கதாபாத்திரங்களில் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார்.
அந்த மறக்க முடியாத நடிகரான எஸ்.வி.ரங்கா ராவ் கதாபாத்திரத்தில்தான் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்தில் மோகன் பாபு நடித்திருக்கிறாராம். இந்தப் படத்தில் நடித்ததிலேயே சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், பத்திரிகையாளராக நடித்த சமந்தா, ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மான், நாகி ரெட்டியாக நடித்த பிரகாஷ் ராஜ், ஏ.நாகேஸ்வர ராவ் ஆக நடித்த விஜய் தேவகொன்டா, ஜமுனாவாக நடித்த ஷாலினி பாண்டே ஆகியோரை விடவும் எஸ்.வி.ரங்கா ராவ் கதாபாத்திரத்தில் நடித்த மோகன் பாபுவுக்குதான் அதிக சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம்.
மோகன் பாபு மறுத்தும், தயாரிப்பாளரும், இயக்குனரும் மனமுவந்து அந்தத் தொகையைக் கொடுத்திருக்கிறார்கள் என்கிறது டோலிவுட் வட்டாரம்.