டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காவரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை கவர்னர் பன்வாரிலால் நியமித்துள்ளார். இதற்கும் தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நல்ல கல்வியாளர்கள் இல்லையா, தமிழர்களை இழிவுப்படுத்த வேண்டாம், காவிமையமாக்க வேண்டாம் என்றெல்லாம் குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன.
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் தன் டுவிட்டரில் பதிவில், "கர்நாடகத்திலிருந்து காவிரி தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத் தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்த சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?"
என பதிவிட்டுள்ளார்.